Deprecated: Creation of dynamic property biz::$db_conn is deprecated in G:\PleskVhosts\madurai-biz.com\maduraibiz\classes\db.php on line 16
Mooligai maruthuvam,குழந்தை பாக்கியம் தரும் கழற்சிக்காய் - Kalarchikai benefits,Madurai Local Directory

Mooligai maruthuvam

குழந்தை பாக்கியம் தரும் கழற்சிக்காய் - Kalarchikai benefits, Mooligai maruthuvam,Madurai Local Directory

குழந்தை பாக்கியம் தரும் கழற்சிக்காய் - Kalarchikai benefits

கழற்சிக்காய் - PCOD-ஐ வெறும் 48 நாளில் நிரந்தரமாக குணமாக்கும்

கழற்சிக்காய் கழற்சி கொடியில் காய்க்கும் அற்புதமான மூலிகை ஆகும். சாதாரணமாக வேலி ஓரங்களிலும் புதர்பகுதிகளில் இந்த கொடி படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதை கச்சக்காய் என்று வீட்டு பெரியோர்கள் அழைப்பதுண்டு. கழற்சிக்காய் பார்க்க முட்டை வடிவில் இருக்கும்.
இதன் ஓடுகள் கடினமாக இருக்கும். மேல்பகுதி முள்கள் போன்று இருக்கும். இந்த ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்புகள் இருக்கும். மென்மையாக இருக்கும் இந்த பருப்பை அப்படியே சாப்பிடமுடியாது. அதிக கசப்புத்தன்மை நிறைந்தது இவை. இந்த கொட்டையின் கசப்பான குணங்களே பலவிதமான மருத்துவ நன்மைகளை அள்ளித்தருகிறது.

PCOD இந்நோயை குணப்படுத்த

PCOD என்பது PCOS-ன் முந்தைய நிலைதான். கருப்பையில் கட்டிகள், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள். உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.
பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பின்) நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.
இந்நோயை குணப்படுத்த கழற்சிக்காய் உதவுகிறது. கழற்சிக்காய் சூரணம் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் அதை வாங்கி தினமும் 5 கிராம் அளவு எடுத்து மோரில் கலந்து காலையிலும் மாலையிலும் இரண்டு வேளை கலந்து குடித்து வந்தால் விரைவில் மாற்றம் தெரியும். தொடர்ந்து 48 நாட்கள் இதை குடித்து வந்தால் சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.

குழந்தை பாக்கியம் தரும் அற்புதமான மூலிகை ஆகும்

கர்ப்பப்பையை தூண்டி சரியான மாதவிலக்கு உண்டாகவும் அடி வயிற்றில் உண்டாகும் அதிக வலியை குறைப்பதற்கும் கழற்சிக்காய் உதவுகிறது. அதிக வெள்ளைப்போக்கு உபாதையையும் குணப்படுத்த உதவுகிறது. குழந்தை பாக்கியம் தரும் அற்புதமான மூலிகை ஆகும்
Tips

நீர்க்கட்டி குணமாக  லவங்கப்பட்டை – இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால், நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் தூவி கொள்ளலாம்.

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா மற்றும் புரத சத்துகள் உதவுகின்றன. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.

விதை வீக்கம் பிரச்சனைக்கு கழற்சிக்காய் சிறந்த மருந்தாகும்

ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும்.
இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும். இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும்.
இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும்.
விரைவாதம் குறைய கழற்சிக்காய் விதையை வாணலியில் போட்டு இலேசாக பச்சை வாடை போகும்படி வறுத்து பொடிக்கவும். இதை சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.

Hits: 1482, Rating : ( 5 ) by 2 User(s).